
கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டன " என்று எழுதினார் கருணாநிதி அவர்கள். கோவில்கள் என்பதற்கு பதிலாக நாம் தனியார் பள்ளிகள் என்று போட்டு கொள்ளலாம்.பள்ளிகளின் கட்டணத்தை முறை படுத்தி, அரசின் அறிவிப்பு வெறும் பேச்சளவில் அல்லது அறிக்கை அளவிலேயே உள்ளது என்பது கண்கூடு. இப்படி ஒரு விஷயம் இருப்பதையே பல தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது காட்டிக்கொள்ளவில்லை.தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை பற்றி அரசுக்கு அறிவிக்க முறையாக இதுவரைக்கும் ஒரு "ஹெல்ப் லைன்" வசதி ஏன் தொடங்கப்படவில்லை என்று தெரியவில்லை.தனியார் பள்ளிகள் பற்றி நான் கண்ட, கேட்ட, பார்த்த விஷயங்களை பற்றி இங்கே எழுதிகிறேன். கூடவே பெற்றோர்களின் அறியாமை பற்றியும் நாம் பார்ப்போம்.1 . ஒரு தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்காக ரூ. 50 ஆயிரம் கட்டணம் வாங்கினார்கள். ஆனால், பில் ஏதும் தரவில்லை. கட்டட நிதி என்று சொல்லி இருக்கிறார்கள்.2 . ஒரு பள்ளியில், குழந்தையை சேர்க்க வந்த பெற்றோர்களிடம் தனியாக இன்டர்வீயு நடத்தி, அவர்கள் இருவரும் கண்டிப்பாக டிகிரி படித்து இருக்கவேண்டும் என்றவர்கள்,, அவர்களின் சான்றிதழ் களை வாங்கி சோதனை செய்தும் இருக்கிறார்கள்.3 . சேர்க்கையின் போது, அரசின் அறிவிப்பை சுட்டி காட்டிய பெற்றோரை, கடுமையாக மிரட்டி இருக்கிறது ஒரு பள்ளியின் நிர்வாகம்.4 . சென்னையில் உள்ள பத்மா சாரங்கபாணி பள்ளியில் வசூலிக்க படும் கட்டணத்தில், ஒரு மாணவன் BE படித்துவிடலாம் என்று சொன்னார் ஒரு நண்பர். பெற்றோர்கள் இங்கு நடைபெறும் கொள்ளையை எதிர்த்து சாலைமறியலில்இறங்கினார்கள்.5 . மற்றொரு பள்ளியில், நாங்கள் கட்டணத்தை குறைக்க மாட்டோம், விருப்பம் இல்லை என்றால் உங்கள் குழந்தைகளை கூட்டி கொண்டு போங்கள் என்று வெளிப்படையா அறிவித்துஇருக்கிறார்கள்.6 . ஒரு நாளிதழில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, ஒரு மிக பெரிய தொகை கொடுத்து, ஒரு பள்ளியில் இருந்து இன்னொரு பள்ளிக்கு ஒன்பதாவது படிக்கும் தனது மகனை மாற்றினார் ஒருவர். அதற்க்கு அவர் சொன்ன காரணம், " இங்கே கோச்சிங் சரியில்லை சார், வரும் வருஷம் டென்த் ஆச்சே "என்றார்.7 . ஒன்பதாவது படிக்கும் போதே பத்தாம் வகுப்புக்கும், பிளஸ் ஒன் படிக்கும் போதே பிளஸ் டூ படிப்பிற்கும் சிறப்பு டியுஷன்களை தொடங்கிவிடுகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். நிறைய மார்க் வாங்க வேண்டுமே என்கிறார்கள்.8 . பள்ளி செல்லும் நேரம் தவிர, குறைந்தது ஆறு மணிநேரம் டியுஷன்களில் செலவு செய்கிறார்கள் பத்தாம் மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள். பள்ளி கட்டணத்துக்கு இணையாக இதற்கும் செலவு செய்கிறார்கள்பெற்றோர்கள்.9 . ஒரு புகழ் பெற்ற தனியார் பள்ளியில் தம் குழந்தைகள் படிப்பதையே இன்று உள்ள படித்த மற்றும் படிக்காத பெற்றோர்கள் விரும்புவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.இவர்கள் அனைவரின் முகத்திலும் தண்ணிரை தெளித்து, அவர்களின் மயக்கத்தை போக்கி இருக்கிறார் ஜாஸ்மின் என்ற மாணவி.திருநெல்வேலியில், ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்யும் ஏழை தந்தை, படிக்காத தாயார் என்ற சூழ்நிலையில் வளர்ந்து ஒரு பெரும் சாதனை நிகழ்த்தி இருக்கிறார் ஜாஸ்மின்.நெல்லை டவுன் அருகே உள்ள கல்லணை எம்.பி. ல் மாநகராட்சி பள்ளியில் படித்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று இருக்கிறார் ஜாஸ்மின். இதில் அனைவரும் கவனிக்க வேண்டிய மற்றும் ஒரு விஷயம்...இவர் தனியாக டியுஷன் எதுவும் படிக்கவில்லை என்பதே.தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தில், அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்த என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இன்று ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். இன்னொருவர், முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் படித்து, நாகை அரசு மருத்துவமனையில் டாக்டராக இருக்கிறார்.ஊட்டி கான்வென்டில் படித்து வீணா போனவர்களும் இருக்கிறார்கள்,மிக சாதாரண அரசு பள்ளியில் படித்து சாதித்தவர்களும் இருக்கிறார்கள்."முயற்சியும், ஈடுபாடும் மட்டுமே நான் வெற்றி பெற காரணம் " என்கிறார் சாதனை மாணவி ஜாஸ்மின்.படிக்கிற பிள்ளைகள் எங்கு இருந்தாலும் படிக்கும் என்பதற்கு இந்த உதாரணங்கள் போதும்தானே?
நன்றி- இட்லி வடை.காம்