
ஜெயலலலிதா அரசு இருக்கும் போதே, சிகரெட் தொடர்பான புகைக்கும் பொருட்களுக்கு பொது இடத்தில் தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஏனோ அதை விற்பதற்கு, தமிழ்நாட்டில் எங்கேயும் தடை கிடையாது. இது மட்டுமில்லாமல், புகையிலை சம்பந்தமான பான்பராக்,ஹான்ஸ், மானிக்சந்த் போன்ற குட்கா அயிட்டங்களை கடைகளில் விற்பதற்கே அதிமுக அரசு தடை செய்தது. இதனால் மாநகராட்சி சம்மந்தமான ஆட்கள், திடீர்திடீரென கடைகளில் ஆய்வு செய்வதும் குட்கா அயிட்டங்கள் விற்பவர்களுக்கு, ஆயிரக்கணக்கில் அபராதம் விதிப்பதும் நடந்தது. இதில் ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று, லஞ்ச லாவண்யமும் புகுந்து விளையாடியது. ஆனால், இன்றைய நிலையே வேறு.. அந்த குட்கா அயிட்டங்களை தமிழக அரசே சென்னை போன்ற மாநகரங்களில் அரசு பேருந்துகளின் பின்னால், போர்டு வைத்து விளம்பரம் செய்கிறது. (உதாரணம் : சாந்தி சூப்பர் என்கிற விளம்பர போர்டு) இதில் உள்ள நியாயம் மக்களுக்கு புரியாமல் விழிக்கிறோம். அரசுகள் மாறிப் போனால் போதை பொருட்கள் பேதையாகிவிடுமா? போதை பொருட்களை விற்பனை செய்வது தவறு என்கிற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும், அதை குறைந்தது விளம்பர படுத்தாமலவாது இருக்கலாமே! மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் விளம்பரங்கள் நிறுத்தப்படுமா?
No comments:
Post a Comment