Monday, August 16, 2010

2011 சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பு




கூட்டணியை பொறுத்து வெற்றி அமையும் என்பதும் சும்மா! பணத்தை வாரிவிடும் அளவை பொறுத்து வெற்றி அமையும் என்பதும் சும்மா..! இன்றைய நிலையில் தி.மு.கவுக்கு படித்தவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது என்பது உண்மை. வாரிசுகளை அநியாயத்துக்கு இறக்கிவிட்டு குடும்பத்துக்காக சொத்துக்களை சுருட்டிக் கொள்கிறது..என்கிற படித்தவர்களின் மனநிலை தி.மு.கவின் வாக்கு வங்கியை பெருமளவு சரிய வைக்கும். கலர் டி.வி.,அரிசி ,என கிராம மக்களின் வாக்குகளை தி.மு.க கணிசமாக பெறும் என்றாலும் அ.தி.மு.க முகாம் திடீரென விழித்துக் கொண்டு தி.மு.க தலைமையை வாட்டி எடுக்கவே கிராம மக்கள் மறுபடியும் குழம்பி விட்டனர்.தே.மு.தி,க வந்த புதிதில் தி.மு.கக்கு காட்டிய எதிர்ப்பை கூட இப்போது காட்டுவதில்லை என்பது தான் உண்மை! இது தே.மு.தி.க விற்கு நல்லதல்ல!அதேப்போல பா.ம.கவும் பயந்து போய் பாய்வதா? பதுங்குவதா என்ற குழப்ப நிலையில் உள்ளதால் மக்கள் மன நிலை இப்போது இது தான்!
கூட்டணி இப்படி இருந்தால்..நிலவரம் அப்படி இருக்கும்!
தி.மு,க-காங்கிரஸ் இன்னும் பிற கட்சிகள்:
அ.தி.மு.க , தே மு.தி.க, பா.ம.க ( தேமுதிக கட்சி அதிமுகவில் இருந்தாலும் அரசியலில் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. என்கிற ரீதியில் பாமக வந்தால்..) ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள்
இப்படி உறுதியான நிலைப்பாடோடு கூட்டணி அமைந்தால் நிச்சயம் அ.தி.மு.க தான் வெல்லும்! ஆனால், இப்போது ஜெயலலிதா வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் மைனாரிடி வார்த்தையை கருணாநிதி வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவார். தே.மு.தி.க வேட்பாளர்களை இன்னும் பலமான ஆட்களாக வளர்த்து விட வேண்டும். இப்போது உள்ள நிலைப்படி இருந்தால் எப்படி கூட்டணி வைத்தாலும் விஜய்காந்த் மட்டுமே ஜெயிப்பார். சரி, ரிசல்ட் என்ன தான் வருகிறது?
அ.தி.மு.க கூட்டணி 160 இடங்களை கைப்பற்றலாம்..மீதம் உள்ள 74 இடங்களை தி.மு.க.கைப்பற்றலாம்.
இது இன்றைய நிலைதான்! தேர்தல் வாக்குறுதிகள்.. கொடநாடு ரெஸ்ட், அண்ணன் தம்பி பதவி சண்டை, வெற்று உறுமல், சினிமா பெட்டியை தூக்குபவர்கள், நான் தான் தலைவர் என போராடுபவர்கள்- இதெல்லாம் தூக்கலாக தெரிந்தால் நிச்சயம் தேர்தல் முடிவுகள் மாறலாம்.


(தொடரும்..)

No comments:

Post a Comment