
பஞ்ச தந்திரம்:
அர்த்தனாரி வயிற்றில் கத்தியை சர்..ரென இறக்கினான் இளங்கோ.பலூன் போல இருந்த அவரது வயிற்றில் ரத்தம் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தது.அவரது மனைவி கூச்சல் போட்டு கதற ஊரே அலறலோடு அர்த்தனாரி வீட்டு முன்பு ஆஜராகியிருந்தது. ஐவரும் ஓட்டம் பிடித்தோம்..நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை..இளங்கோ அவரை சாக அடிக்க துணிவானென..சும்மா இருந்த நான் பொழுது போக்க வந்து இப்படி மாட்டுவோமென கனவிலும் நினைக்கவேயில்லை.. * * * * * நான்கு காக்கிகள் படபடவென உள்ளே வந்தனர்..இன்ஸ்பெக்டர் அமைதியாக அர்த்தனாரியை நோட்டமிட்டார்.அண்டர்வேரின் கயிறு வேட்டியை தாண்டி தொங்கி கொண்டிருந்தது.இரவிலும் கூட தலை சீவி விட்டு படுப்பவர் போல..தலை கலையாமல் இருந்தது..கயிற்று கட்டிலின் வழியே அரை டம்ளர் அளவுக்கு ரத்தம் ஒழுகியிருந்தது. குறைந்தது மூன்று குத்தாவது குத்தியிருக்க வேண்டும்..வயிற்றின் அளவு அவ்வாறு சொன்னது..முட்டி கொண்டிருந்த வயிற்றின் மீது..ரத்தம் உறைந்து போய் காணப்பட்டது..ஆனால், மனிதன் மிகவும் ஃசாப்ட்டான உடம்பு என்பதால் உடனே செத்திருக்க கூடும்.சுற்றிலும் பார்த்த இன்ஸ்பெக்டர்.. தலையை புரட்டி..புரட்டி அழுது கொண்டிருந்த அர்த்தனாரியின் மனைவியை பார்த்தார்.‘‘ஹே..ஹே....ஹேய்..அது தடயம்மா..உங்க ரேகை பதியக்கூடாது..அழாதீங்கம்மா...கவலை படாதீங்க..கான்ஸ்டபிள் கூட்டத்தை கலைங்க.. கிராமம்னாவே இது ஒரு பிரச்னை.. எதுனா கூட்டம் அநியாத்துக்கு சேர்ந்திடுது..நகரம்னா..வரவே பயப்படுவாங்க..ம்....!’’‘‘அம்மா உங்க பேரு..’’‘‘ மல்லிகாங்கய்யா..’’‘‘கொலை நடந்தப்ப நீங்க எங்க இருந்தீங்க...?!’’‘‘ நானும் என் மகளும் உள்ளே படுத்துப்போம்..அவரு வெளியே படுத்துக்குவாருங்க...கதவு இருக்கு, சாத்திக்குவோம்..திடீர்னு படபடன்னு யாரோ நிறைய பேர் வர மாதிரி சத்தம் கேட்டுச்சு..அப்புறம் சடார்னு ஒரு வித்தியசமான ஆம்பளை குரல் கத்தறமாதிரி சவுண்ட்..எனக்கு ஈரக்கொலையெல்லாம் நடுங்கிடுச்சு..வெளியே வந்து பார்க்கறப்போ அஞ்சு பேர் திடு திடுன்னு ஓடினாங்க..அவங்க முகம் கூட சரியா தெரியலைங்கய்யா..!’’ அதற்கு மேல் மல்லிகாவால் பேச முடியவில்லை..மயங்கி சரிந்தாள்..‘‘பாப்பா உன் பேரு..?’’‘‘ரோகினி சார்..’’‘‘என்ன படிக்கிறீங்களா..?!’’‘‘ஆமா..பி.இ...விவேகானந்தாவுல...’’‘‘அப்பாவுக்கு யாராவது எதிரி உண்டுங்களா.. தெரியுமா?’’‘‘அவருக்கு கடன் கொடுக்கும், வாங்கும் பழக்கம் கிடையாதுங்க..மத்தபடி அஞ்சு பட்டுத்தறி ஓடுது..இதுல எதிரி வர சான்ஸே இல்லை..!’’ முகம் அவளுக்கு வீங்கியிருந்தாலும் தெளிவாக பேசினாள்.அப்ப என்னவா இருக்கும்..கோல்ட் ப்ளாக் சிகரெட்டை ஜீப்பின் மீது தட்டியவாறே வாயில் வைத்தார் இன்ஸ்பெக்டர்...‘இப்பவெல்லாம் கிராமத்துல கூட பொசுக்கு பொசுக்குன்னு போட்டுறானுங்க....வந்தவங்க நகையோ..பணமோ எடுக்க வரலன்றது உறுதியா தெரியுது..கொலை பண்ண வந்திருக்காங்க...கச்சதமா முடிச்சிட்டு போயிட்டானுங்க.. அந்த பொண்ணு மேல எவனாவது ஆசைப்பட்டிருப்பானோ..ச்சீ..சீ..காதலுக்காக பொண்¬ணை வேணா கொலைப் பண்ணுவான்..அவங்க அப்பனை எதுக்கு பண்ணனும்..? ‘எஸ்...எஸ்...அந்த மல்லிகாவுக்கு எவனாவது கள்ளக்காதலன் இருக்கானான்னு விசாரிக்கனும்?!’ * * * * *
இந்த கொலைக்கு இரண்டு மணிநேரம் முன்பு..
ஊருக்குள் ஒட்டியிருந்தாலும் அது தனியான தென்னந்தோப்பு..இருபது தென்னை மரங்கள் இருக்கும். எங்கள் ஊர் மக்கள் அங்கேதான் காலை, மாலை வேளைகளில் ஒதுங்குவார்கள்.அருகிலேயே ஒரு பாழடைந்த தொட்டி..இரண்டு மாமரம்..அவ்வப்போது திரியும் பாம்புகள்..அந்த பாழடைந்த தொட்டி மீது அமர்ந்து சிகரெட்டை பற்ற வைப்பதே தனி சுகம் . அவ்வப் போது கணேஷ் பீடி! .ரோகினியை தூக்க திட்டம் தயாராகி கொண்டிருந்தது.
‘‘டேய்..உனக்கு அவதான் சரியான ஜோடி..நீ படிச்ச அஞ்சாம் க்ளாஸ் படிப்புக்கு, தறி ஓட்ற இடத்துலேயே, அதுவும் அந்த ஓனர் மகளே கிடைப்பான்னு நான் கனவுல கூட நினைக்கலடா..’’
‘‘உனக்கு அதிர்ஷ்டம்டா..எங்கேயோ மச்சமிருக்கு..!’’
‘‘அவளை இன்னைக்கு ராத்திரிக்கு தூக்கறோம்..வந்தா ரோகினி..இல்லைன்னா அவ தாவணி..!’’ஐடியா கொடுத்த சகாக்களை தன் தாடியை சொறிந்தவாரே ஒரு மார்க்கமாக பார்த்தான் இளங்கோ.
‘‘அவளுக்கு ஓ.கே தான்டா.. என்ன அவ அப்பனை பார்த்தா தான் பயமா இருக்கு.. அதுவும் அவன் வயிறு...’’
‘‘என்னடா மடையா பேசற..வயித்த பாத்து எவனாவது பயப்படுவானா? உன் ஆளு கர்ப்பமானா கூட தான் வயிறு பெருசா இருக்கும்..நீ பயப்படுவியா என்ன?!’’ பிரபு அவன் தோள் மீது கை வைக்க.. ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியது போல சலிப்பு தட்டியது இளங்கோவுக்கு.
இந்த ஆட்டங்களை பார்த்து கொண்டிருந்த நான் மௌனமாகவே இருந்தேன்.
அவள் ஆறாம் க்ளாஸ் போகும் போதிலிருந்தே இளங்கோவுக்கு ரோகினி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதாம்! என்னவென்றே புரியாமல் அந்த சுகமான சுமையை அனுபவித்து கொண்டிருந்திருக்கிறான் படுபாவி... அவள் ஒன்பதாவது போகும் போது இளங்கோவை பார்த்து ‘களுக்..’கென்று சிரித்து தொலைத்தாளாம்..அதிலிருந்து மெல்ல லவ் டெவலப் ஆகிவிட்டதாம்.. அவ்வப்போது தென்னந்தோப்பு பக்கம் ஒரு மாலை பொழுதில் ஒதுங்கும் போது சொல்வான்..அது வயிற்றை கலக்கும் நேரமாக இருந்தாலும், பலபேருக்கு வயிறு எறியும்.
ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன்... எனக்கும் அவள் மீது நான்காம் க்ளாஸிலிருந்தே புரியாத ஒரு ஈர்ப்பு.. நான் தயங்கி தயங்கி லவ்வை சொல்லும் போது அவள் எட்டாம் வகுப்பு. அப்போதே இளங்கோவை காதலிப்பதாக என்னிடம் சொல்லிவிட்டாள். ஆனால், அவனிடம் அந்த ‘களுக்’ காட்டியது ஒரு வருடம் கழித்து தான்.இப்ப நாலு வருஷம்னு அந்த லவ் சீனியாரிட்டியோடு ஸ்டார்ங்கா இருக்கு. தரி கெட்ட பயலுக்கு..தறி முதலாளி எவனாவது பொண்ணை தருவானா..? அதான் கூட்டிக்கிட்டு ஓட திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..இந்த விஷயத்தில் எனக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் சுவாரஸ்யமாக இருப்பதால் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.‘‘அவளும் அவ அம்மாவும் உள்ளே படுத்துக்குவாங்க..’’‘‘உன் பொண்டாட்டியும்..உன் மாமியாரும்னு சொல்லு..!’’ இது பன்னீர். ரணகளத்திலும் ஒரு குதூகலம்!‘‘சரிடா..வெளியே அந்த குண்டன்....உள்ளே போகனும்னா அவனை தாண்டி தான் போகனும் வேற வழியேயில்லை..இடது பக்கம் தறி கொட்டாய்..அது தனி..எல்லாபக்கமும் தடுப்பு உண்டு.. அங்கெல்லாம் போகவே முடியாது..போகவும் தேவையில்லை..இப்ப இவனை தாண்டனும்..அவ்வளவுதான்..!’’‘‘டேய் உன் மாமனார்..நல்லா தூங்குவாரா? உஷாரான பார்ட்டியா?’’ இது பிரபு.‘‘எவனாவது வெளிநாட்டுக்காரன் புடவை எடுக்க வந்தா..நல்லா காசு கிடைக்கும். அதுல தண்ணியை போட்டுட்டு ஒன்னுக்கு வரது கூட தெரியாம தூங்குவான்..’’‘‘அப்ப இன்னைக்கு எவனோ வெள்ளைக்காரன் வந்ததா சொன்ன.. நல்லா தூங்குவான்..பொண்ணுக்கும் சொல்லிட்ட.. போவோம்..கதவை தட்டுவோம்..பொண்ணு வரும்..அலேக்கா கூட்டிட்டு வருவோம்..சுப்ரமணியர் கோயில்ல வச்சு தாலியை கட்டுவோம்..நாளைக்கு இந்நேரம் உனக்கு மொத ராத்திரி..ஓகே..’’‘‘ ஓகே..ஓகே..’’ எல்லோரும் தலையை ஆட்டினார்கள். நானும் தான்!
அர்த்தனாரி ஒண்ணும் பெரிய பணக்காரன் இல்ல..அவன் பூசணினா..இவன் தர்பூசணி! அப்புறம் என்ன... கேட்டா பொண்ணை கொடுத்துட்டு போறான்..சும்மா..ஓடறோம்..நடக்கறோம்னு சொல்லிக்கிட்டு..இவன் முதலாளியாம்..அவன் தொழிலாளியாம்..தமிழ் சினிமா ஆரம்பிச்ச காலத்திலிருந்து இது ஒரு பிரச்னைடா..திருந்த மாட்டேன்றாங்க.. சரிவிடு..அறிவுரை சொன்னா..நம்மள முட்டாள் பையன்னு என் அப்பனையும் சேர்த்து வாருவானுங்க...வாயை மூடிக்கிட்டு நடக்கறதை பார்ப்போம்..
* * * * *இன்ஸ் விசாரிக்க துவங்கினார்..மல்லிகாவின் மேலேயே சந்தேகம் வந்தது.‘‘ஊருக்குள் யாருய்யா பெரிய மனுஷன் வாங்கய்யா..’’‘‘அய்யா..நானு.. என் பேரு மாணிக்கம்..’’‘‘இந்த கொலையை பத்தி ஏதாவது உனக்கு தெரியுமா?!’’‘‘ நீங்க மல்லிகாவை சந்தேகப்படறதா சொன்னாங்க..அவ தங்கமான பொம்பளைங்க..குழாயடியில கூட இது வரைக்கும் சண்டை போட்டிருக்க மாட்டா..வாயில்லா பூச்சி..கொல்ற அளவுக்கு துணிச்சலெல்லாம் அவளுக்கு கிடையாது..’’ மாணிக்கம் ஸ்டெயிட்டாக விஷயத்துக்கு வந்தததும் வாயடைத்து தான் போனார் இன்ஸ்பெக்டர். ஆனால், காட்டிக் கொள்ளவில்லை..‘‘அவங்க உனக்கு எதாவது சொந்தமா..?’’‘‘மாமன் பொண்ணுங்க..’’‘அப்ப செல்லாது..செல்லாது..’ன்னு நாட்டாமை கணக்கா பேச முடியாது..ஏன்னா கிராமத்துல சொந்தங்க தான் சுத்தி சுத்தி இருப்பாங்க..‘‘அய்யா..இன்னைக்கு ஒரு வெள்ளைக்காரன் பட்டு புடவை எடுக்க வந்தான்.. இருபதாயிரம் ரூபா புடவையை பத்து அதிகம் வச்சு தள்ளி விட்டதுல..அவனுக்கும் இவனுக்கும் வாய்த் தகராறு முத்தி போச்சு..ஆனா, இது தொழில்ல சகஜம்..அவன் ஒருவேளை..?!’’‘‘யோவ்..வெள்ளைக்காரனுக்கு கொலை செய்யலாம் தோணாது.....துப்பாக்கி தான் தெரியுமில்ல..’’‘‘அய்யோ..அவன் கொன்னுருக்க மாட்டான்..ஆளு வச்சு..நடத்திருந்தா..’’‘‘உனக்கு நல்ல மூளைன்னு பாராட்டபோறதில்லை.. ஒழுங்கா பதிலை சொல்லலைன்னா..‘நீதான்’னு ஈஸியா கேஸை முடிச்சிடுவேன்..’’‘‘.........................’’‘‘இங்கே எத்தனை பேரு தறி போட்டிருக்காங்க?!’’‘‘நான் நான்கு தறி..அப்புறம் அவரு தான்..விவாசாயிங்க வாழுற பூமியில நாந்தேன்யா முதன் முதலா தறியே போட்டு ஊரை டெவலப் பண்ணேன்..அப்புறம் தான் அர்த்தனாரியே..!’’கொலை ஆகியிருக்கிற இடத்தில் கூட தன்னை விளம்பர படுத்திக்கொள்ளும் மாணிக்கத்தை பார்த்து லேசாக இன்ஸ்பெக்டருக்கு டென்ஷன் தலை தூக்கியது.‘‘பொண்ணு ரோகினி எப்படி?!’’‘‘அந்த பொண்ணு..ஐம்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கிற..காலேஜுக்கு போகுது..நல்ல பொண்ணு..நல்லா படிக்கும்.எந்த வம்பு தும்புக்கும் போகாது..’’‘‘அப்புறம் எப்படிய்யா...?!’’‘‘வியாபாரம் நல்லா ஆச்சுன்னா.. அர்த்தனாரி பட்டை சாராயம் தான் அடிச்சுட்டு படுப்பான்..அதுல எதுனா பிரச்னை இருக்குமோங்கய்யா?!’’சி.பி.ஐ. ரேஞ்சுக்கு மாணிக்கம் சொன்னாலும், இன்ஸ§க்கு எதுவும் பிடிபடவில்லை..யோசித்தவாறே ஜீப்பில் ஏறி பறந்தார்.
* * * * *நான் ஓ..வென அழ ஆரம்பித்து விட்டேன். பிரபு, பெருமாள், பன்னீர் மூன்று பேரின் முகமும் வாடியிருந்தது.‘‘என்னடா இப்படி பண்ணிட்ட..?!’’ என அடிக்கவே பாய்ந்து விட்டான் பெருமாள்.‘‘என்னடா சம்பளம் எதாவது ஏத்தி தரமாட்டேனு சொல்லிட்டானா..இப்படி போட்டுட்ட..!’’ இது பிரபு.‘‘பொண்ணை தூக்குடான்னா..அவங்க அப்பனையே தூக்கிட்டியேடா..நாயே..’’பன்னீர்.‘‘சும்மா நிறுத்துங்கடா, நான் தான் பொம்பள வெறியில அப்படி பண்ணிட்டேன்..நீங்களாவது தடுக்க கூடாதா? சரிவிடு..தொப்பையன் இருந்து என்ன பண்ணப்போறான்..சாகட்டும்..அவன் செத்தாதான் நல்லதாகவே நடக்கும்..அதேபோல அந்த ரோகினியை நான் கல்யாணம் பண்ணிக்கற மாதிரி இல்ல..நம்ம மேல எவனுக்கும் சந்தேகம் வராது..அமைதியா போய் படுங்க..மத்தத காலையில பேசிக்கலாம்..!’’ என சாதாரணமாக இளங்கோ சொன்னது..ஏதோ அவன் திட்டம் போட்டு கொன்றது போலவே எனக்கு தோன்றியது.எல்லோரும் பேஸ்த் அடித்து போயிருந்தோம்..இளங்கோ சடாரென வீட்டை நோக்கி புறப்பட்டு விட்டான்.நாங்கள் நால்வரும் நல்ல நிலையில் இல்லை..தொட்டிக்குள் வைத்திருந்த பீடியை பார்த்தேன்..இருந்தது..அதை பற்ற வைத்துக்கொண்டே..தலையில் அடித்துக் கொண்டு நடந்தேன்..மூவரும் என்னுடனே இளங்கோவை ஆரம்பகாலங்களில் அவன் செய்த குற்றம் முதல் சொல்லி திட்டிக் கொண்டே வந்தனர்.நான் இந்த கொலையை செய்யவில்லையென்றாலும், காலையில மோப்ப நாய் வருமே..அது கரெக்டா காட்டி கொடுத்துடுமே..என்ன பன்றது..அநியாயத்துக்கு ஒரு ஜீவன் மாட்டிக்கிச்சே..அய்யோ கடவுளே..எனக்கு வயிற்றை கலக்கியது..யாருக்கும் தெரியாமல் மிளகாய் பொடியை வீட்டில் முன்பு தூவிவிட்டு..நன்றாக போர்த்தி படுத்துக் கொண்டேன்..தூக்கம் வரவில்லை..புரண்டேன்..அந்த கொலையே ஞாபகத்தில் வந்தது.கண்ணீர் வர.., அமைதியாக அழுது கொண்டே தூங்கி விட்டேன்.காலையில் அம்மாதான் எழுப்பி காபி தந்தாள்.‘‘டேய் விஷயம் தெரியுமா..போலீஸ்ல இளங்கோவை பிடிச்சுக்கிட்டு போயிட்டாங்கடா..’’அந்த காபி எனக்கு விஷம் போல இருந்தது.‘‘அவனே சரண்டர் ஆகிட்டானாம். கொலை பண்ணது அவன் தானாமே..’’நான் வாய் பேசவில்லை..கோர்ட்டுக்கு இளங்கோ வந்தான்.முகமெல்லாம் வீங்கி இருந்தது.நாங்கள் நால்வரும் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டோம்..படுபாவி..மாட்டி விட்ருவானோ..என்னடா பண்ணி தொலைக்கிறது..எனக்கு பன்றி காய்ச்சல் வந்தது போலவே பயம்..இளங்கோ முழித்த முழியே சரியில்லை..எனக்கு தெரியும்..அவன் இப்படி முழித்தாலே ஏதோ விவகாரமாகத்தான் பேசுவான்..ம்.. பார்ப்போம்..இளங்கோ நீதிபதி முன் பேசத் தொடங்கினான்.‘‘அய்யா.. எங்கம்மாவோட.... ஒருநாள்... அர்த்தனாரி...கட்டி...’’ இளங்கோ அழ ஆரம்பித்தான்.
இந்த கொலைக்கு இரண்டு மணிநேரம் முன்பு..
ஊருக்குள் ஒட்டியிருந்தாலும் அது தனியான தென்னந்தோப்பு..இருபது தென்னை மரங்கள் இருக்கும். எங்கள் ஊர் மக்கள் அங்கேதான் காலை, மாலை வேளைகளில் ஒதுங்குவார்கள்.அருகிலேயே ஒரு பாழடைந்த தொட்டி..இரண்டு மாமரம்..அவ்வப்போது திரியும் பாம்புகள்..அந்த பாழடைந்த தொட்டி மீது அமர்ந்து சிகரெட்டை பற்ற வைப்பதே தனி சுகம் . அவ்வப் போது கணேஷ் பீடி! .ரோகினியை தூக்க திட்டம் தயாராகி கொண்டிருந்தது.
‘‘டேய்..உனக்கு அவதான் சரியான ஜோடி..நீ படிச்ச அஞ்சாம் க்ளாஸ் படிப்புக்கு, தறி ஓட்ற இடத்துலேயே, அதுவும் அந்த ஓனர் மகளே கிடைப்பான்னு நான் கனவுல கூட நினைக்கலடா..’’
‘‘உனக்கு அதிர்ஷ்டம்டா..எங்கேயோ மச்சமிருக்கு..!’’
‘‘அவளை இன்னைக்கு ராத்திரிக்கு தூக்கறோம்..வந்தா ரோகினி..இல்லைன்னா அவ தாவணி..!’’ஐடியா கொடுத்த சகாக்களை தன் தாடியை சொறிந்தவாரே ஒரு மார்க்கமாக பார்த்தான் இளங்கோ.
‘‘அவளுக்கு ஓ.கே தான்டா.. என்ன அவ அப்பனை பார்த்தா தான் பயமா இருக்கு.. அதுவும் அவன் வயிறு...’’
‘‘என்னடா மடையா பேசற..வயித்த பாத்து எவனாவது பயப்படுவானா? உன் ஆளு கர்ப்பமானா கூட தான் வயிறு பெருசா இருக்கும்..நீ பயப்படுவியா என்ன?!’’ பிரபு அவன் தோள் மீது கை வைக்க.. ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியது போல சலிப்பு தட்டியது இளங்கோவுக்கு.
இந்த ஆட்டங்களை பார்த்து கொண்டிருந்த நான் மௌனமாகவே இருந்தேன்.
அவள் ஆறாம் க்ளாஸ் போகும் போதிலிருந்தே இளங்கோவுக்கு ரோகினி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதாம்! என்னவென்றே புரியாமல் அந்த சுகமான சுமையை அனுபவித்து கொண்டிருந்திருக்கிறான் படுபாவி... அவள் ஒன்பதாவது போகும் போது இளங்கோவை பார்த்து ‘களுக்..’கென்று சிரித்து தொலைத்தாளாம்..அதிலிருந்து மெல்ல லவ் டெவலப் ஆகிவிட்டதாம்.. அவ்வப்போது தென்னந்தோப்பு பக்கம் ஒரு மாலை பொழுதில் ஒதுங்கும் போது சொல்வான்..அது வயிற்றை கலக்கும் நேரமாக இருந்தாலும், பலபேருக்கு வயிறு எறியும்.
ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன்... எனக்கும் அவள் மீது நான்காம் க்ளாஸிலிருந்தே புரியாத ஒரு ஈர்ப்பு.. நான் தயங்கி தயங்கி லவ்வை சொல்லும் போது அவள் எட்டாம் வகுப்பு. அப்போதே இளங்கோவை காதலிப்பதாக என்னிடம் சொல்லிவிட்டாள். ஆனால், அவனிடம் அந்த ‘களுக்’ காட்டியது ஒரு வருடம் கழித்து தான்.இப்ப நாலு வருஷம்னு அந்த லவ் சீனியாரிட்டியோடு ஸ்டார்ங்கா இருக்கு. தரி கெட்ட பயலுக்கு..தறி முதலாளி எவனாவது பொண்ணை தருவானா..? அதான் கூட்டிக்கிட்டு ஓட திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..இந்த விஷயத்தில் எனக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் சுவாரஸ்யமாக இருப்பதால் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.‘‘அவளும் அவ அம்மாவும் உள்ளே படுத்துக்குவாங்க..’’‘‘உன் பொண்டாட்டியும்..உன் மாமியாரும்னு சொல்லு..!’’ இது பன்னீர். ரணகளத்திலும் ஒரு குதூகலம்!‘‘சரிடா..வெளியே அந்த குண்டன்....உள்ளே போகனும்னா அவனை தாண்டி தான் போகனும் வேற வழியேயில்லை..இடது பக்கம் தறி கொட்டாய்..அது தனி..எல்லாபக்கமும் தடுப்பு உண்டு.. அங்கெல்லாம் போகவே முடியாது..போகவும் தேவையில்லை..இப்ப இவனை தாண்டனும்..அவ்வளவுதான்..!’’‘‘டேய் உன் மாமனார்..நல்லா தூங்குவாரா? உஷாரான பார்ட்டியா?’’ இது பிரபு.‘‘எவனாவது வெளிநாட்டுக்காரன் புடவை எடுக்க வந்தா..நல்லா காசு கிடைக்கும். அதுல தண்ணியை போட்டுட்டு ஒன்னுக்கு வரது கூட தெரியாம தூங்குவான்..’’‘‘அப்ப இன்னைக்கு எவனோ வெள்ளைக்காரன் வந்ததா சொன்ன.. நல்லா தூங்குவான்..பொண்ணுக்கும் சொல்லிட்ட.. போவோம்..கதவை தட்டுவோம்..பொண்ணு வரும்..அலேக்கா கூட்டிட்டு வருவோம்..சுப்ரமணியர் கோயில்ல வச்சு தாலியை கட்டுவோம்..நாளைக்கு இந்நேரம் உனக்கு மொத ராத்திரி..ஓகே..’’‘‘ ஓகே..ஓகே..’’ எல்லோரும் தலையை ஆட்டினார்கள். நானும் தான்!
அர்த்தனாரி ஒண்ணும் பெரிய பணக்காரன் இல்ல..அவன் பூசணினா..இவன் தர்பூசணி! அப்புறம் என்ன... கேட்டா பொண்ணை கொடுத்துட்டு போறான்..சும்மா..ஓடறோம்..நடக்கறோம்னு சொல்லிக்கிட்டு..இவன் முதலாளியாம்..அவன் தொழிலாளியாம்..தமிழ் சினிமா ஆரம்பிச்ச காலத்திலிருந்து இது ஒரு பிரச்னைடா..திருந்த மாட்டேன்றாங்க.. சரிவிடு..அறிவுரை சொன்னா..நம்மள முட்டாள் பையன்னு என் அப்பனையும் சேர்த்து வாருவானுங்க...வாயை மூடிக்கிட்டு நடக்கறதை பார்ப்போம்..
* * * * *இன்ஸ் விசாரிக்க துவங்கினார்..மல்லிகாவின் மேலேயே சந்தேகம் வந்தது.‘‘ஊருக்குள் யாருய்யா பெரிய மனுஷன் வாங்கய்யா..’’‘‘அய்யா..நானு.. என் பேரு மாணிக்கம்..’’‘‘இந்த கொலையை பத்தி ஏதாவது உனக்கு தெரியுமா?!’’‘‘ நீங்க மல்லிகாவை சந்தேகப்படறதா சொன்னாங்க..அவ தங்கமான பொம்பளைங்க..குழாயடியில கூட இது வரைக்கும் சண்டை போட்டிருக்க மாட்டா..வாயில்லா பூச்சி..கொல்ற அளவுக்கு துணிச்சலெல்லாம் அவளுக்கு கிடையாது..’’ மாணிக்கம் ஸ்டெயிட்டாக விஷயத்துக்கு வந்தததும் வாயடைத்து தான் போனார் இன்ஸ்பெக்டர். ஆனால், காட்டிக் கொள்ளவில்லை..‘‘அவங்க உனக்கு எதாவது சொந்தமா..?’’‘‘மாமன் பொண்ணுங்க..’’‘அப்ப செல்லாது..செல்லாது..’ன்னு நாட்டாமை கணக்கா பேச முடியாது..ஏன்னா கிராமத்துல சொந்தங்க தான் சுத்தி சுத்தி இருப்பாங்க..‘‘அய்யா..இன்னைக்கு ஒரு வெள்ளைக்காரன் பட்டு புடவை எடுக்க வந்தான்.. இருபதாயிரம் ரூபா புடவையை பத்து அதிகம் வச்சு தள்ளி விட்டதுல..அவனுக்கும் இவனுக்கும் வாய்த் தகராறு முத்தி போச்சு..ஆனா, இது தொழில்ல சகஜம்..அவன் ஒருவேளை..?!’’‘‘யோவ்..வெள்ளைக்காரனுக்கு கொலை செய்யலாம் தோணாது.....துப்பாக்கி தான் தெரியுமில்ல..’’‘‘அய்யோ..அவன் கொன்னுருக்க மாட்டான்..ஆளு வச்சு..நடத்திருந்தா..’’‘‘உனக்கு நல்ல மூளைன்னு பாராட்டபோறதில்லை.. ஒழுங்கா பதிலை சொல்லலைன்னா..‘நீதான்’னு ஈஸியா கேஸை முடிச்சிடுவேன்..’’‘‘.........................’’‘‘இங்கே எத்தனை பேரு தறி போட்டிருக்காங்க?!’’‘‘நான் நான்கு தறி..அப்புறம் அவரு தான்..விவாசாயிங்க வாழுற பூமியில நாந்தேன்யா முதன் முதலா தறியே போட்டு ஊரை டெவலப் பண்ணேன்..அப்புறம் தான் அர்த்தனாரியே..!’’கொலை ஆகியிருக்கிற இடத்தில் கூட தன்னை விளம்பர படுத்திக்கொள்ளும் மாணிக்கத்தை பார்த்து லேசாக இன்ஸ்பெக்டருக்கு டென்ஷன் தலை தூக்கியது.‘‘பொண்ணு ரோகினி எப்படி?!’’‘‘அந்த பொண்ணு..ஐம்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கிற..காலேஜுக்கு போகுது..நல்ல பொண்ணு..நல்லா படிக்கும்.எந்த வம்பு தும்புக்கும் போகாது..’’‘‘அப்புறம் எப்படிய்யா...?!’’‘‘வியாபாரம் நல்லா ஆச்சுன்னா.. அர்த்தனாரி பட்டை சாராயம் தான் அடிச்சுட்டு படுப்பான்..அதுல எதுனா பிரச்னை இருக்குமோங்கய்யா?!’’சி.பி.ஐ. ரேஞ்சுக்கு மாணிக்கம் சொன்னாலும், இன்ஸ§க்கு எதுவும் பிடிபடவில்லை..யோசித்தவாறே ஜீப்பில் ஏறி பறந்தார்.
* * * * *நான் ஓ..வென அழ ஆரம்பித்து விட்டேன். பிரபு, பெருமாள், பன்னீர் மூன்று பேரின் முகமும் வாடியிருந்தது.‘‘என்னடா இப்படி பண்ணிட்ட..?!’’ என அடிக்கவே பாய்ந்து விட்டான் பெருமாள்.‘‘என்னடா சம்பளம் எதாவது ஏத்தி தரமாட்டேனு சொல்லிட்டானா..இப்படி போட்டுட்ட..!’’ இது பிரபு.‘‘பொண்ணை தூக்குடான்னா..அவங்க அப்பனையே தூக்கிட்டியேடா..நாயே..’’பன்னீர்.‘‘சும்மா நிறுத்துங்கடா, நான் தான் பொம்பள வெறியில அப்படி பண்ணிட்டேன்..நீங்களாவது தடுக்க கூடாதா? சரிவிடு..தொப்பையன் இருந்து என்ன பண்ணப்போறான்..சாகட்டும்..அவன் செத்தாதான் நல்லதாகவே நடக்கும்..அதேபோல அந்த ரோகினியை நான் கல்யாணம் பண்ணிக்கற மாதிரி இல்ல..நம்ம மேல எவனுக்கும் சந்தேகம் வராது..அமைதியா போய் படுங்க..மத்தத காலையில பேசிக்கலாம்..!’’ என சாதாரணமாக இளங்கோ சொன்னது..ஏதோ அவன் திட்டம் போட்டு கொன்றது போலவே எனக்கு தோன்றியது.எல்லோரும் பேஸ்த் அடித்து போயிருந்தோம்..இளங்கோ சடாரென வீட்டை நோக்கி புறப்பட்டு விட்டான்.நாங்கள் நால்வரும் நல்ல நிலையில் இல்லை..தொட்டிக்குள் வைத்திருந்த பீடியை பார்த்தேன்..இருந்தது..அதை பற்ற வைத்துக்கொண்டே..தலையில் அடித்துக் கொண்டு நடந்தேன்..மூவரும் என்னுடனே இளங்கோவை ஆரம்பகாலங்களில் அவன் செய்த குற்றம் முதல் சொல்லி திட்டிக் கொண்டே வந்தனர்.நான் இந்த கொலையை செய்யவில்லையென்றாலும், காலையில மோப்ப நாய் வருமே..அது கரெக்டா காட்டி கொடுத்துடுமே..என்ன பன்றது..அநியாயத்துக்கு ஒரு ஜீவன் மாட்டிக்கிச்சே..அய்யோ கடவுளே..எனக்கு வயிற்றை கலக்கியது..யாருக்கும் தெரியாமல் மிளகாய் பொடியை வீட்டில் முன்பு தூவிவிட்டு..நன்றாக போர்த்தி படுத்துக் கொண்டேன்..தூக்கம் வரவில்லை..புரண்டேன்..அந்த கொலையே ஞாபகத்தில் வந்தது.கண்ணீர் வர.., அமைதியாக அழுது கொண்டே தூங்கி விட்டேன்.காலையில் அம்மாதான் எழுப்பி காபி தந்தாள்.‘‘டேய் விஷயம் தெரியுமா..போலீஸ்ல இளங்கோவை பிடிச்சுக்கிட்டு போயிட்டாங்கடா..’’அந்த காபி எனக்கு விஷம் போல இருந்தது.‘‘அவனே சரண்டர் ஆகிட்டானாம். கொலை பண்ணது அவன் தானாமே..’’நான் வாய் பேசவில்லை..கோர்ட்டுக்கு இளங்கோ வந்தான்.முகமெல்லாம் வீங்கி இருந்தது.நாங்கள் நால்வரும் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டோம்..படுபாவி..மாட்டி விட்ருவானோ..என்னடா பண்ணி தொலைக்கிறது..எனக்கு பன்றி காய்ச்சல் வந்தது போலவே பயம்..இளங்கோ முழித்த முழியே சரியில்லை..எனக்கு தெரியும்..அவன் இப்படி முழித்தாலே ஏதோ விவகாரமாகத்தான் பேசுவான்..ம்.. பார்ப்போம்..இளங்கோ நீதிபதி முன் பேசத் தொடங்கினான்.‘‘அய்யா.. எங்கம்மாவோட.... ஒருநாள்... அர்த்தனாரி...கட்டி...’’ இளங்கோ அழ ஆரம்பித்தான்.
No comments:
Post a Comment