
நானும் நண்பர் இளங்கோவும் அவ்வப்போது திருவிளையாடல் நாகேஷ், சிவாஜி போல பேசிக்கொள்வது உண்டு. அப்படி ஒருநாள் நான் நாகேஷாய் கேள்விகள் கேட்கவே, அவர் பெரிய பதில் சிவாஜியாய் மாறிய கதைதான் கீழே...!
இந்த காலத்தில் மனிதனை விட மிஷினுக்குத் தான் மதிப்பு அதிகமாமே உண்மையா?
உண்மைதான்!
கடந்த வாரம் சென்னையில் திருவள்ளுவர் வேஷம் அணிந்து, போராட்டம் செய்த முரளிதரன் என்பவரை, போலீஸ் கைது செய்தது. காரணம் என்னவென்றால், 1330 குறளுக்கும் இவர் நடனம் மூலமே விளக்கம் அளிப்பாராம். அதை கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தி காட்ட விரும்பியுள்ளார். அனுமதி கிடைக்கவில்லை. உடனே, விருந்தினர் மாளிகைக்கு எதிரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார். கைது செய்து புழல் சிறையில் அடைத்தது போலீஸ்! ஆனால்,அதே நாளில் சென்னை பல்கலைகழக மணிக்கூண்டில் உள்ள பழமை வாய்ந்த கடிகாரத்தில் மணிக்கொரு முறை குறளும், விளக்கமும் வருமாறு செட்டப் செய்து துவக்கி வைத்தது தமிழக அரசு. இப்ப சொல்லுங்க எதுக்கு மதிப்பு அதிகம்!
கேள்வி: தாங்கள் ரசித்த சமீபத்திய காமெடி?
பதில்: எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை,திரைக்கதை,வசனம் தயாரிப்பில் வரப்போகும் படம் 'வெளுத்துக்கட்டு"இந்தப் படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்த விஜய், தனது அப்பா சந்திரசேகனை கட்டிப்பிடித்து..'அப்பா கலக்கிட்டீங்க..' என்று பாராட்டினாராம்..இதை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சந்திரசேகரன் பெருமையாக சொல்லிக் கொண்டார்.என்னவோ போங்க..!
? ராமாதாஸும் விஜயகாந்தும் ஒரே கூட்டணியில், இருப்பது போல ஒருநிலை வந்தால் முதலில் என்ன பேசிக் கொள்வார்கள்?
பதில்: மன்னிச்சூசூ..!
?பத்திரிகையாளர் கருணாநிதியும், பத்திரிகையாளர் சோவும் அநியாயத்துக்கு எழுத்துப்போர் நடத்துகிறார்களே..அதற்கு ஸ்பெஷல் காரணம் ஏதாவது உண்டா?
எனக்கு தெரிந்து ஒரே காரணம் தான். கருணாநிதி- முரசொலியில் தன்னைத்தானே புகழ்ந்துக் கொள்வார். அதற்கு உதாரணங்கள் பல.சோ-துக்ளக்கில் தன்னை தானே இகழ்ந்துக் கொள்வார்.உதாரணமாக துக்ளக் ஆரம்பித்த முதல் இதழில் (1970 ஆம் ஆண்டு)அட்டைப்படம் இப்படி வந்திருந்தது.ஒருக் கழுதையும் மற்றொரு கழுதையும் பேசிக் கொள்கின்றன. முதல் கழுதை-" சோன்னு ஒரு ஆளு புத்தகம் ஆரம்பிச்சிருக்கானாமே..!"அதற்கு மற்றொரு கழுதை " அப்ப நமக்கு நல்ல தீணி தான்னு சொல்லு!"
எப்பூடி!
சென்னையில் உள்ள தெருக்களின் பெயர்கள் எல்லாம் தமிழிலேயே பெயர் மாற்றம் செய்யப் போகிறார்களாமே?
இப்படித்தான்..எல்லா விஷயத்துலேயும் தமிழ் இருக்கனும் என்று, ராமதாஸ் விளம்பரத் தட்டியெல்லாம் வைத்து தமிழை பரப்பினாரு.ஆனால், எம்.பி தேர்தலில் எல்லா இடங்களிலும் தோற்றார்.இப்போ தி.மு.க இதை செய்கிறது. என்ன நடக்குமோ பார்க்கலாம்.( கவலை படாத தம்பீ..சொல்லிட்டம்ல பேரை மாத்த மாட்டாங்க)
No comments:
Post a Comment