Saturday, May 7, 2011

அன்று !


வீரப்பன்!



கர்நாடக மாநிலம், சாம்ராஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபிறந்தத்தை சொந்த ஊராகக் கொண்ட வீரப்பனின் உடல், அவரது மனைவியின் ஊரான தமிழ்நாடு, மூலக்காடு கிராமத்தில் அவரது மனைவி,வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன்,சகோதரி முனியம்மா மற்றும் பிள்ளைகள் வித்யாராணி,பிரபா ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் நடந்தேறியுள்ளன.

வீரப்பனின் சொந்த ஊரில் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும், பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியிருந்ததாகவும் தெரிவித்திருந்த காவற்துறையினர், வீரப்பனின் உடலை அங்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது மனைவியின் சொந்த ஊரான மூலக்காடு பகுதியில் உடலை எரிப்பதற்காக எடுத்துச்சென்ற போதும், அவரது உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகரின் தலையீட்டால் அவரது உடல் புதைக்கப்பட்டுள்ளது.

தனது சொந்த ஊரில் வீரப்பனை இறுதியாக அவரது 15 வயதில் ஒரு தடவை பார்த்திருப்பதாக அந்த ஊரைச்சேர்ந்த இருவர் கூறியுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரின் கெடுபிடிகள் காரணத்தால் வீரப்பன் தனது சொந்த ஊருக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

எனினும்,வீரப்பனுக்கு ஆதரவானவர்கள் என்ற போர்வையில் இவ்வூரைச் சேர்ந்த பலரை அதிரடிப்படையினர் அடித்தே கொன்றிருப்பதாக ஊரைச் சேர்ந்தவர்கள் சாட்சியளித்துள்ளனர்.

ஊர் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையையும் ஆள்வைத்து முடிவெடுப்பதே வீரப்பனின் வழக்கமாக இருந்ததாக அவரோடு பணியாற்றிய முன்னாள் சகா கோவிந்தன் கருத்து தெரிவித்திருக்கும் அதே வேளை,

அதிரடிப்படையினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து வீரப்பனின் இழப்பினால் ஏற்பட்டிருக்கும் துயரத்தை மக்கள் மறைத்துக் கொண்டுள்ளதாகவும் ஊடகம் ஒன்றின் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

வீரப்பனின் இளைய மகள் பிரபா இது தான் முதற் தடவையாக தனது தந்தையின் முகத்தை நேரடியாக பார்த்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இனியாவது எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தமிழக காவற்துறையினருக்கு உருக்கமான வேண்டு கோள் ஒன்றினை விடுத்துள்ள போதும்,

வீரப்பனின் மனைவிக்குச் சொந்தமான பணம்,சொத்துக்களை முடக்கி வைத்தும் அவர்களை பின்தொடர்ந்து அவர்கள் வாழ்க்கையினை இழுபறி நிலையில் வைத்திருக்கும் தமிழக காவற்துறை இது பற்றி முன்னேற்றகரமான எந்தெவொரு அறிக்கையையும் வழங்கவில்லை.

இதே வேளை, வீரப்பனின் குடும்பத்தாருக்கு எந்த வித நிவாரணமோ,இழப்புகளோ வழங்கப்படமாட்டாது என்று தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • -2004 ஆம் ஆண்டு வெளியான செய்தி


No comments:

Post a Comment